சதுரகிரி செல்லும் வழிப்பாதை நீர் ஓடைகளில் வெள்ளப்பெருக்குபக்தர்கள் செல்ல வனத்துறை தடை விதித்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது
சதுரகிரி செல்லும் வழிப்பாதை நீர் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு., கார்த்திகை மாதம் பிரதோஷம் மற்றும் பௌர்ணமிக்கு பக்தர்கள் செல்ல வனத்துறை தடை விதித்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது..*;
தொடர் மலையின் காரணமாக விருதுநகர் மாவட்டம் சதுரகிரி செல்லும் வழிப்பாதை நீர் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு., கார்த்திகை மாதம் பிரதோஷம் மற்றும் பௌர்ணமிக்கு பக்தர்கள் செல்ல வனத்துறை தடை விதித்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில். இந்த கோவிலானது கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது.இந்த கோவிலுக்கு தினந்தோறும் பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய கடந்த காலங்களில் அனுமதி வழங்கப்பட்ட நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பத்திற்க்கும் மேற்பட்ட பக்தர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கோவிலுக்கு செல்ல மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி ஆகிய எட்டு நாட்கள் மட்டுமே வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் அனுமதி அளிக்கப்படும் மழை பெய்வதற்கான அறிகுறி மற்றும் சாரல் மழை பெய்தால் பக்தர்கள் மலையேறி செல்ல தடை விதிக்கப்படும். இந்நிலையில் இன்று கார்த்திகை மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு நான்கு நாட்கள் பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி அளித்த நிலையில் தொடர் மழையின் காரணமாக சதுரகிரி கோவிலுக்கு செல்லும் நீரோடை பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காரணத்தால் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வனத்துறை தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில் இன்று மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் சதுரகிரி செல்லும் வழிப்பாதைகளில் உள்ள மாங்கனி ஓடை, தானிப்பாறை அடிவார ஓடை, கருப்பசாமி கோவில் ஓடை உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பகுதிகளில் சென்னை பேரிடர் மேலாண்மை அதிகாரி கணேசன் மற்றும் உசிலம்பட்டி வருவாய்த்துறையினர் பேரையூர் வட்டாட்சியர் உள்ளிட்டோர் மழை வெள்ளத்தை பார்வையிட்டனர். கார்த்திகை மாதம் பிரதோஷம் மற்றும் பௌர்ணமிக்காக பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்ட நாட்களில் தொடர் மழை காரணத்தால் வனத்துறை தடை விதித்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.