மீனவர் சங்கம் துவக்க விழா நடைபெற்றது

பள்ளிபாளையத்தில் புதிய மீனவர் சங்கத் துவக்க விழா நிகழ்ச்சியில் நடந்தது;

Update: 2024-12-25 12:06 GMT
பள்ளிபாளையம் ஆவரங்காடு நகராட்சி திருமண மண்டபத்தில் ,  அன்னை காவேரி மீனவ நலச்சங்கம் துவக்க விழா  நடைபெற்றது. இந்த விழாவில் பள்ளிபாளையம் நகர் மன்ற தலைவர்  மோ.செல்வராஜ், நகர மன்றத் துணைத் தலைவர் ப.பாலமுருகன் ஆகியோர் கலந்துகொண்டு சங்க கொடியேற்றி, சங்க பலகையை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்கள். இந்நிகழ்வில்  மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர், சங்ககௌரவ ஒருங்கிணைப்பாளர் இல.முருகன் முன்னிலை வகித்தார். சங்க தலைவர் ராஜாமணி, நகர முன்னணி பொறுப்பாளர்கள், நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் திராளாக கலந்து கொண்டனர்....

Similar News