அரசு கலை அறிவியல்  கல்லூரியில் கணித மேதை ராமானுஜம் பிறந்த நாள் விழா  

குமாரபாளையம்  அரசு கலை மற்றும் அறிவியல்  கல்லூரியில் கணித மேதை  பிறந்த நாள் விழா   கொண்டாடப்பட்டது.;

Update: 2024-12-28 14:24 GMT
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம்  அரசு கலை மற்றும் அறிவியல்  கல்லூரியில் கணித மேதை ராமானுஜம் பிறந்த நாள் விழா முதல்வர் ரேணுகா தலைமையில்  கொண்டாடப்பட்டது. ராமானுஜம் குறித்த பேச்சுப் போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வர் புத்தகங்கள் பரிசாக வழங்கினார். ராமானுஜம் சாதனைகள் குறித்து, வணிகவியல் துறைத்தலைவர் ரகுபதி, பேராசிரியை சரவணா தேவி பேசினார்கள். இதில் பேராசிரியர்கள், பெற்றோர் உள்பட பலர் பங்கேற்றனர்.

Similar News