ஜோலார்பேட்டை அருகே கணவனுடன் சேர்ந்து வாழ மறுத்த மனைவிக்கு கத்தி குத்து
ஜோலார்பேட்டை அருகே கணவனுடன் சேர்ந்து வாழ மறுத்த மனைவிக்கு கத்தி குத்து;
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே கணவனுடன் சேர்ந்து வாழ மறுத்த மனைவிக்கு கத்தி குத்து திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே மண்டலவாடி கிராமத்தை சேர்ந்தவர் பிரீத்தா(24). இவருக்கும், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வஉசி நகரை சேர்ந்த கணேசன் மகன் பிரபு(31). என்பவருக்கும் ஐந்து ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. இவர்களுக்கு ஒரு மகன், இரு மகள்கள் உள்ளனர். மேலும் பிரபு சமையல் காஸ் டெலிவரி பாய்யாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த வாரம் ஏற்பட்ட தகராறு காரணமாக விரக்தியடைந்த பிரீத்தா மண்டலவாடியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு பிள்ளைகளுடன் வந்தார். ஆனால் மீண்டும் கணவனிடம் செல்லவில்லை. இதற்கிடையே இன்று காலை மனைவி பார்க்க வந்த பிரபு தன்னுடன் சேர்ந்து வாழ வற்புறுத்தியுள்ளார். அதற்கு பிரீத்தா சேர்ந்து வாழ விருப்பமில்லை என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பிரபு வீட்டின் சமையல் அறையில் இருந்த கத்தியை கொண்டு பிரீத்தாவை சரமாரியாக குத்தினார். இதில் படுகாயமடைந்த பிரீத்தாவை அங்கிருந்தவர்கள் மீட்டு திருப்பத்துார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் இது குறித்து பிரீத்தா கொடுத்த புகாரின் பேரில், ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து பிரபுவை கைது செய்தனர்.