அரசு கலை கல்லூரியில் போதை பொருட்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி  மற்றும்  இலக்கிய மன்ற துவக்க விழா  

குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் போதை பொருட்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் இலக்கிய மன்ற துவக்க விழா நடந்தது.;

Update: 2025-01-01 13:11 GMT
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் போதை பொருட்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் இலக்கிய மன்ற துவக்க விழா கல்லூரி முதல்வர் ரேணுகா தலைமையில் நடந்தது. தமிழ்த்துறை தலைவர் முரளிதரன் பங்கேற்று, போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் பற்றியும், அதனை தடுக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் பேசினார். தமிழ் இலக்கிய மன்ற தொடக்க விழாவில் சிறப்பு பேச்சாளராக உடுமலைபேட்டை அரசு கலைக் கல்லூரி தமிழ்த்துறை இணை பேராசிரியர் அபுபக்கர் பங்கேற்று, நவீன இலக்கியமும் வாழ்வியலும் எனும் தலைப்பில் பேசினார். பேராசிரியர்கள் ரகுபதி, சரவணாதேவி, மாணவ, மாணவியர், பேராசிரிய பெருமக்கள் பெருமளவில் பங்கேற்றனர்.

Similar News