அடையாளம் தெரியாத  முதியவர் இறப்பு

குமாரபாளையம் அருகே அடையாளம் தெரியாத முதியவர் இறந்தார்.;

Update: 2025-01-03 13:33 GMT
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே வட்டமலை பேருந்து நிறுத்த நிழற்கூடத்தில், 75 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் டிச. 16ல்  மாலை  02:30 மணியளவில் மயக்க நிலையில் கிடந்தார். ஆம்புலன்ஸ் மூலம் இவர் பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்கு  சேர்க்கப்பட்டார். இவர் சிகிச்சை பலனின்றி  இறந்தார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Similar News