புஞ்சைபுளியம்பட்டி அருகே பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை வாலிபர் கைது
புஞ்சைபுளியம்பட்டி அருகே பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை வாலிபர் கைது;
புஞ்சைபுளியம்பட்டி அருகே பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை வாலிபர் கைது ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புஞ்சைபுளியம்பட்டி பகுதியை சேர்ந்த 15 வயது பள்ளி சிறுவன் ஒருவன், பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு செல்வ தற்காக பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த கார்த்தி (வயது 36) என்பவர் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவன் கூச்சலிட்டான். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் கார்த்தியை பிடித்து புஞ்சை புளியம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்ப போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்தியை கைது செய்தனர்.ஏற்கனவே கார்த்தி மீது சத்தியமங்கலம், புஞ்சை புளியம்பட்டி போலீஸ் நிலையங்களில் 8-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள் ளதாக போலீசார் தெரிவித்தனர்