மலைக்கோவிலில் அலை மோதிய பக்தர்கள் கூட்டம்
மலைக்கோவிலில் அலை மோதிய பக்தர்கள் கூட்டம்;
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள புகழ்பெற்ற அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில் ஆணும் பெண்ணும் சரிநகர் சமம் என்பதை உலகிற்கு உணர்த்தும் வகையில் ஆண் பாதி பெண் பாதி உருவமாக அர்த்தநாரீஸ்வரராக அருபாலித்து வருகிறார் இத்திருக்கோயிலில் தினசரி அதிகாலை 4:30 மணிக்கு மரகத லிங்கத்திற்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது மார்கழி மாதத்தில் அதிகாலை முதல் காலை 7 மணி வரை மரகதலிங்கம் மூலவர் சன்னதியில் அர்த்தநாரீஸ்வரர் பாதத்தில் வைத்து அபிஷேகங்கள் செய்யப்பட்டு பொதுமக்கள் தரிசனத்திற்காக வைக்கப்படும் இந்த ஆண்டும் மார்கழி ஒன்று முதல் அபிஷேகங்கள் செய்யப்பட்டு மக்கள் வழிபாட்டிற்கு வைக்கப்பட்டது மார்கழி மாதக் கடைசி நாள் என்பதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் திருச்செங்கோடு மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் அதிகாலையில் இருந்து மலைக் கோவிலுக்கு வரத் தொடங்கினர் மக்களின் வருகையைத் தொடர்ந்து திருச்செங்கோடு நாமக்கல் சாலையில் கோவிலின் நுழைவு வாயில் அமைந்துள்ள பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முடியாமல் கோவில் நிர்வாகம் திணறியது கீழ இருந்து மலைக்கு மேலே கோவிலுக்கும் மலைக் கோவிலில் இருந்து கீழே வருவதற்கும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது கோவிலில் அதிக மக்கள் கூட்டம் இருந்ததால் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர் பொதுமக்களின் கூட்ட நெரிசலால் வாகனங்களை நிறுத்த முடியாமல் பக்தர்களும் நிலை தடுமாறி தவித்து வந்தனர் தொடர்ந்து தங்கள் குடும்பத்துடன் கோவிலுக்கு வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர் மார்கழி கடைசி நாளான இன்று அர்த்தநாரீஸ்வரருக்கும் மரகதலிங்கத்திற்கும் சிறப்பு அபிஷேகங்கள் செய்து ஆராதனைகள் செய்யப்பட்டது ஆங்காங்கே பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது