கார் ஏறி இறங்கியதில் விபத்தில் விவசாயி சாவு
கார் ஏறி இறங்கியதில் விபத்தில் விவசாயி சாவு;
கார் ஏறி இறங்கியதில் விபத்தில் விவசாயி சாவு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள எரங்காட்டுப் பாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 70). விவசாயி. இவர் நேற்று முன் தினம் புஞ்சைபுளியம்பட்டியில் இருந்து எரங்காட்டுப் பாளையத்துக்கு சைக்கிளில் சென்றபோது பின்னால் வந்த மோட்டார்சைக்கிள் மோதியதில் கீழே விழுந்த அவர் மீது அந்த வழியாக சென்ற கார் ஏறி இறங்கியதில் ஆறுமுகம் பரிதாபமாக |உயிரிழந்தார். இதுகுறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.