பழனி செல்லும் பக்தர்கள் வீசிச் சென்ற பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றும்

பழனி செல்லும் பக்தர்கள் வீசிச் சென்ற பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றும் பணியில் காங்கேயம் மற்றும் தாராபுரத்தைச் சேர்ந்த மக்கள் நல அறக்கட்டளை சேர்ந்த தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.;

Update: 2025-01-23 10:38 GMT
காங்கேயம் வழியாக பழனிக்கு பக்தர்கள் பாதயாத்திரை செல்கிறார்கள். அவர்கள் ஆங்காங்கே சாலையோரம் மரத்தடி நிழல்களில் அமர்ந்து பின்னர் செல்கின்றனர். இவ்வாறு ஓய்வெடுக்கும் மற்றும் சமைக்கும் பக்தர்கள் அந்த இடத்திலேயே குப்பைகள், பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவற்றை விட்டு விட்டு செல்கின்றனர். இதனால் காங்கேயம் தாராபுரம் சாலையில் பெரும்பாலான இடங்களில் குப்பைகளாக காணப்படுகிறது. இதனை அகற்றும் பணியில் தற்போது காங்கேயம் மற்றும் தாராபுரத்தைச் சேர்ந்த மக்கள் நல அறக்கட்டளை சேர்ந்த தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Similar News