பவானிசாகர் அருகே மது விற்றவர் சிக்கினார்

பவானிசாகர் அருகே மது விற்றவர் சிக்கினார்;

Update: 2025-02-04 05:22 GMT
பவானிசாகர் அருகே மது விற்றவர் சிக்கினார் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகரில் உள்ள அண்ணா சிலை அருகே சட்டவிரோதமாக மது விற்பதாக பவானிசாகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து போலீசார் அங்கு சென்று பார்த்தபோது ஒருவர் மது விற்றுக் கொண்டிருந்தார் இதனால் போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் இலங்கை தமிழர் மறுவாழ்வு இல்லத்தைச் சேர்ந்த தேவேந்திரன் (வயது 52) என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 22 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Similar News