வீட்டில் தீப்பிடித்து சீர்வரிசை உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து நாசம்

மர்மமான முறையில் வீட்டில் தீப்பிடித்து எரிந்தது வீட்டு உபயோக பொருட்கள், முக்கிய ஆவணங்கள் எரிந்துநாசம் பூட்டிய வீட்டில் மர்மமான முறையில் தீ பற்றிக் கொண்டு வீட்டு உபயோக பொருட்கள், திருமண சீர்வரிசை மற்றும் முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசமான சம்பவத்தால் பரபரப்பு;

Update: 2025-02-06 04:21 GMT
திருத்தணியில் மர்மமான முறையில் வீட்டில் தீப்பிடித்து எரிந்தது வீட்டு உபயோக பொருட்கள், முக்கிய ஆவணங்கள் எரிந்துநாசம் பூட்டிய வீட்டில் மர்மமான முறையில் தீ பற்றிக் கொண்டு வீட்டு உபயோக பொருட்கள், திருமண சீர்வரிசை மற்றும் முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சியில் எம்.ஜி.ஆர் நகரில் வசித்து வரும் வெற்றி நாதன் என்பவரின் வீட்டில் அவரது உறவினர் முருகேசன்(39) (வெல்டர்) அவரது மனைவி ராமி அவர்களின் இரு குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில், மாலை முருகேசன் மனைவி ராமி அவரது மகளை பள்ளியில் இருந்து அழைத்து வர வீட்டை பூட்டிக் கொண்டு சென்ற போது வீட்டிலிருந்து கரும்புகை சுழுந்து கொண்டதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக திருத்தணி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதற்குள் தளம் போட்ட வீடு முழுவதும் தீ பரவியது. உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு, தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தினர். தீ விபத்தில் வீட்டு உபயோக பொருட்கள், முக்கிய ஆவணங்கள் மற்றும் அவரது உறவினருக்கு திருமணத்தின்போது வழங்கிய சீர்வரிசையாக வழங்கிய பொருட்கள் வைக இட வசதியின்றி முருகேசன் வீட்டில் வைத்திருந்த அனைத்து சீர் வரிசை பொருட்களும் எரிந்து நாசமானது. வீடு எரிந்து நாசமான சம்பவத்தில் மர்மமான முறையில் வீட்டில் தீப்பற்றிக் கொண்ட சம்பவம் தொடர்பாக திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News