சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மைய பூமி பூஜையில் பங்கேற்ற பொன்னேரி எம்எல்ஏ

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மைய பூமி பூஜையில் பங்கேற்ற பொன்னேரி சட்டமன்ற உறுப்பினரிடம் இடிந்த நிலையில் உள்ள அங்கன்வாடி கட்டிடத்தை கட்டி தர கோரியும் பேருந்து வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை;

Update: 2025-02-06 10:06 GMT
திருவள்ளூர் வேலூரில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மைய பூமி பூஜையில் பங்கேற்ற பொன்னேரி சட்டமன்ற உறுப்பினரிடம் இடிந்த நிலையில் உள்ள அங்கன்வாடி கட்டிடத்தை கட்டி தர கோரியும் பேருந்து வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர் திருவள்ளூர் மாவட்டம் வேலூர் ஊராட்சியில் தெலுங்கு காலணி பகுதியில் பொதுமக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்க்கும் வகையில் 10 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் அமைப்பதற்கான பூமி பூஜையை பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் தொடங்கி வைத்தார் அப்போது கிராம மக்கள் தங்கள் பகுதியில் இடிந்து போன நிலையில் உள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தில் குழந்தைகள் ஆபத்தான நிலையில் தினந்தோறும் வந்து போவதாகவும் அங்கன்வாடி மையத்தை இடித்துவிட்டு புதிதாக கட்டித் தரக் கோரியும் பேருந்து வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர் புதிய அங்கன்வாடி மையம் கட்டுவதற்கும் பேருந்து வசதி ஏற்படுத்தி தரவும் உரிய நடவடிக்கை எடுப்பதாக சட்டமன்ற உறுப்பினர் அவர்களிடம் உறுதி அளித்தார்

Similar News