கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழியை
காவல் நிலையம், மாவட்ட ஆயுதப்படை மற்றும் காவல்துறை அலுவலகங்களில் பணிபுரியும் காவலர்களும் மேற்படி உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.;
கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் இன்று மாவட்ட காவல்துறையினர் கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 09 -ம் நாள் கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு தினம் பின்பற்றப்பட்டு வருகின்றது. எனவே கொத்தடிமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று 07.02.2025-ம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா உத்தரவின்படி கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் T.மதியழகன் (தலைமையிடம்) மற்றும் M.பாலமுருகன் (மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு) ஆகியோர்களின் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். இவ்வுறுதிமொழியின்படி இந்திய அரசமைப்பு சட்டத்தின்படி மனிதனை வணிகப் பொருளாக்குதலும், வலுக்கட்டாயமாக வேலை சுமத்தும் வழக்கங்களும், கடன் பிணையத் தொகையை வழங்கி கட்டாய பணிக்கு வற்புறுத்துவதும் தண்டனைக்குரிய குற்றமாக வரையறை செய்யப்பட்டுள்ளதால், கொத்தடிமை தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழித்திடும் நோக்கத்தை கருத்தில் கொண்டு சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும் இந்திய அரசமைப்புச் சட்டம் வகை செய்துள்ள அடிப்படை உரிமைகளை அனைவருக்கும் உரித்தாக்குவதற்கு கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்புச் சட்டத்தை சீறிய முறையில் செயல்படுத்த உறுதுணையாக இருந்து கொத்தடிமை தொழிலாளர் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவதற்கு பொறுப்புடன் செயல்படுவேன் என்றும் உளமாக உறுதி கூறுகிறேன்.என்று கொத்தடிமை ஒழிப்பு உறுதி மொழியை ஏற்றுக் கொண்டனர். மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையம், மாவட்ட ஆயுதப்படை மற்றும் காவல்துறை அலுவலகங்களில் பணிபுரியும் காவலர்களும் மேற்படி உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.