தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம்

தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் முதல் கட்டமாக 10.2.2025 அன்றும், இரண்டாம் கட்டமாக 17.2.2025 அன்றும் நடைபெறவுள்ளது;

Update: 2025-02-08 17:40 GMT
பெரம்பலூர் மாவட்டம் தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் முதல் கட்டமாக 10.2.2025 அன்றும், இரண்டாம் கட்டமாக 17.2.2025 அன்றும் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தகவல். பெரம்பலூர் மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் 10.2.2025 அன்று முதல் கட்டமாகவும், 17.2.2025 அன்று இரண்டாம் கட்டமாக விடுபட்ட குழந்தைகளுக்கும் நடைபெற உள்ளது. இச்சிறப்பு முகாமில் 1 முதல் 19 வயதிலான அனைத்து குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கும் 20 முதல் 30 வயதிலான அனைத்து பெண்களுக்கும் (கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தவிர்த்து) குடல் புழு நீக்க மாத்திரை (அல்பென்டசோல்) வழங்கப்படுகிறது. 1 முதல் 5 வரை உள்ள குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையங்களிலும் 6 முதல் 19 வயது வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட உள்ளது. பள்ளிக்கு செல்லாத குழந்தைகளுக்கு கிராம சுகாதார செவிலியரும், அங்கன்வாடி பணியாளர்களும், வீடுவீடாக சென்று குடற்புழு மாத்திரைகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அங்கன்வாடி பணியாளர்கள் கிராம சுகாதார செவிலியர், சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவ அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோர் மூலமாக குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படுகிறது. இம்மாத்திரைகளை உட்கொள்வதன் மூலம் ஊட்டச்சத்து குறைபாடுகள் களையப்பட்டு குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் மாணவர்களின் கல்வித்திறன் மேம்படும். தேசிய குடற்புழு நீக்கல் மாத்திரை வழங்கும் திட்டத்தின் மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 1,73,916 குழந்தைகள் மற்றும் மாணவர்கள், 45,034 பெண்கள் பயன்பெறவுள்ளனர். மேலும் பள்ளிகளிலும் அங்கன்வாடி மையங்களிலும் தன் சுத்தம் பற்றியும், திறந்த வெளியில் மலம் கழித்தலை தவித்தல் பற்றியும் கை கழுவும் முறைகள் பற்றியும் நலக்கல்வி வழங்கவும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News