திருத்தணி முருகன் கோவில் தெரியாத அளவிற்கு கடும் பனிப்பொழிவு
திருத்தணி முருகன் கோவில் தெரியாத அளவிற்கு கடும் பனிப்பொழிவு. மலைப்பாதையில் எதிர்வரும் வாகனங்கள் தெரியாததால் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு செல்லும் வாகனங்கள்.;
திருத்தணி முருகன் கோவில் தெரியாத அளவிற்கு கடும் பனிப்பொழிவு. மலைப்பாதையில் எதிர்வரும் வாகனங்கள் தெரியாததால் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு செல்லும் வாகனங்கள். திருத்தணி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக அதிகாலையில் லேசான பனி மூட்டம் காணப்பட்டு வருகிறது. இந்தநிலையில் திருத்தணி முருகன் மலைக்கோவில் அதனை சுற்றியுள்ள கே.ஜி.கண்டிகை, கனகம்மாசத்திரம், திருவாலங்காடு, மத்தூர் ஆகிய பகுதிகளில் பனிபொழிவு அதிகமாக காணப்பட்டது. இதனால் முருகன் மலைக்கோவில் பாதை திருத்தணி அரக்கோணம் சாலை, சித்தூர் சாலை, மற்றும் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் மோட்டார் சைக்கிள் மற்றும் கனரக வாகனங்களில் அதிகாலை நேரங்களில் சென்றவர்கள் கடுமையான பனிமூட்டத்தால் அவதியடைந்தனர். ஒரு சில இடங்களில், சாலையில் எதிரே வரும் வாகனங்கள்கூட தெரியாத அளவுக்கு பனிமூட்டம் இருந்ததால் வாகனங்களின் முகப்பு விளக்கை எரிய விட்டபடியே வாகன ஓட்டிகள் மெதுவாக சென்றனர்.