கல்லை புத்தகத் திருவிழாவில் சின்னசேலம் தமிழ்ச்சங்கம் சார்பில் கவியரங்கம் நடந்தது.கள்ளக்குறிச்சியில் நடந்து வரும் கல்லை புத்தக திருவிழாவில் சின்னசேலம் தமிழ்ச்சங்கம் சார்பில் கவியரங்கம் நடந்தது. சங்கத் தலைவர் கவிதைத்தம்பி தலைமை தாங்கினார். செயலாளர் அம்பேத்கர் முன்னிலை வகித்தார். கவிஞர் இதயம் கிருஷ்ணா, வெற்றிவேல், அங்கமுத்து, ராமானுஜம், வாசுகி பொன்னரசு, ராதா, மஞ்சுளா வெங்கடேசன், பிரகாஷ், கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்டு 'புத்தகம் பேசினால்'எனும் தலைப்பில் கவியரங்கம் நடத்தினர். நடராஜன் நன்றி கூறினார்.