நாகை துறைமுகத்திலிருந்து நாகை - இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு
கப்பல் போக்குவரத்தை மும்மதத்தினர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்;
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16-ம் தேதி நாகை- காங்கேசன் துறைமுகத்திற்கு இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கியது. வாரம் 5 நாட்கள் இரு மார்க்கமும் சென்று வந்த கப்பல், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் பாதுகாப்பு கருதி, அப்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இம்மாதம் 12-ம் தேதி கப்பல் போக்குவரத்து தொடங்க இருந்த நிலையில், தொழில்நுட்ப சான்றிதழ் அனுமதி கிடைப்பதில் காலத்தாமதம் ஏற்பட்டது. பின்னர், அனைத்து அனுமதிகளும் பெறப்பட்டதால், 83 பயணிகளுடன் நாகை துறைமுகத்திலிருந்து புறப்பட்டது. மும் மதங்களை சேர்ந்தவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். நாகை -இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து இயக்கப்படுவது குறித்து நிர்வாகத்தினர் கூறியதாவது இனி செவ்வாய்க்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்களும் பயணிகள் கப்பல் இயக்கப்பட உள்ளது. இரு மார்க்கத்திற்கும் சேர்த்து கட்டணம் ரூ.8500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பயணிகள் லக்கேஜ் கை பையில் 10 கிலோ வரை இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக லக்கேஜ் எடுத்துச் செல்வதற்கு கட்டணம் வெப்சைட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.