கெட் அவுட் மோடி, கெட் அவுட் ஸ்டாலின் திமுக பாஜகவினர் இடையில் மோதல்
திருத்தணி ரயில் நிலையம் அருகே சுவர் விளம்பரம் எழுதுவதில் திமுக பாஜகவினர் இடையில் மோதல். போட்டா போட்டியாக கெட் அவுட் மோடி, கெட் அவுட் ஸ்டாலின் என்று கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்தால் திருத்தணியில் பரபரப்பு;
திருத்தணி ரயில் நிலையம் அருகே சுவர் விளம்பரம் எழுதுவதில் திமுக பாஜகவினர் இடையில் மோதல். போட்டா போட்டியாக கெட் அவுட் மோடி, கெட் அவுட் ஸ்டாலின் என்று கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்தால் திருத்தணியில் பரபரப்பு. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகரில் ரயில் நிலையம் அருகே மா.பொ.சி சாலையில் ரயில்வே துறைக்கு சொந்தமான சுவரில் பாஜகவினர் தாமரை சின்னம் வரைந்து வருகின்றனர். மிக பிரதான சாலையில் உள்ள சுவர் முழுவதும் தாமரை சின்னம் எழுதி வரும் நிலையில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு சுவர் விளம்பரம் எழுத திமுகவினர் முயற்சி செய்தனர் அதனை பாஜகவினர் தடுத்து நிறுத்தியதால் மாவட்ட இளைஞரணி திமுக அமைப்பாளர் திருத்தணி ம.கிரன் தலைமையில் இளைஞர் அணி நிர்வாகிகள் மற்றும் திருத்தணி நகர திமுகவினர் 100க்கும் மேற்பட்டோர் ம.பொ.சி சாலையில் குவிந்து. சுவரில் திமுக விளம்பரம் எழுத தொடங்கியதால் பாஜகவினர் மற்றும் திமுகவின் உடைய வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆவேசமடைந்த திமுகவினர் கெட் அவுட் மோடி என்று கோஷங்கள் எழுப்பி பிரதான சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அவர்களுக்கு போட்டியாக பாஜகவை சேர்ந்தவர்களும் கோ பேக் ஸ்டாலின் என்று கோஷங்கள் எழுப்பியதால் திமுக மற்றும் பாஜக வினர் இடையில் போட்டோ போட்டி நிலவியது. இதனால் திருத்தணி ம.பொ.சி சாலையில் இரு கட்சியினர் இடையில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.