சேலம் அன்னதானப்பட்டியில், நாளை மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
செயற்பொறியாளர் தகவல்;
சேலம் தெற்கு கோட்ட அளவில் மின்நுகர்வோருக்கான குறைதீர்க்கும் கூட்டம், அன்னதானப்பட்டியில் உள்ள தெற்கு கோட்ட மின்வாரிய அலுவலகத்தில் நாளை (புதன்கிழமை) காலை 11 மணி அளவில் நடைபெறுகிறது. கூட்டத்திற்கு சேலம் மின் பகிர்மாக வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமை தாங்குகிறார். இதில் அந்த பகுதியை சேர்ந்த மின்நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகள் மற்றும் கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என்று சேலம் தெற்கு கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் அன்பரசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.