குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே குரியன்விளை ஶ்ரீ பத்திரகாளி அம்மன் கோவிலில் நடக்கும் 12-வது பஞ்சபூத ஷப்த விம்ஷத்தி நட்சத்திர யாகத்திற்கான ஆலோசனை கூட்டம் கோயில் வளாகத்தில் நடந்தது. கூட்டத்தில் கோயில் நிர்வாக தலைவர் விக்கிரமன் சுவாமி தலைமை வகித்தார். செயலாளர் சாந்தகுமார், பொருளாளர் சசி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கோயில் திருவிழா கமிட்டி செயலாளர் விஷ்ணு அறிக்கை வாசித்தார். ஒய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர் செல்வமணி, ஓய்வு பெற்ற தியணைப்பு துறை அலுவலர் பிரதாப் உள்ளிட்டோர் பேசினர். இந்த ஆலோசனை கூட்டத்தில் வரும் ஏப்ரல் மாதம் 27-ம் தேதி முதல் மே 3-ம் தேதி வரை நடக்கும் 12-வது பஞ்சபூத ஷப்த விம்ஷத்தி நட்சத்திர மஹா யாகம் மற்றும் சித்திரை பரணி பிரதிஷ்டை . திருவிழா சிறப்பாக நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆலோசனை கூட்டத்தில் கோயில் நிர்வாகிகள். திருவிழா கமிட்டி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.