ராணிப்பேட்டை அருகே லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி!

லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி!;

Update: 2025-03-03 05:49 GMT
ராணிப்பேட்டையை அடுத்த வேப்பூர் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் ஜோதிஷ்குமார் (வயது 35). இவர் வேலையை முடித்துவிட்டு ராணிப்பேட்டையில் இருந்து வேப்பூர் நோக்கி நடந்து வந்துள்ளார். எஸ்.எம்.எச். மேம்பாலத்தின் மீது வந்த போது எதிர்பாராத விதமாக திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது பின்னால் வந்த லாரியின் பின்பக்க சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ராணிப்பேட்டை போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News