குச்சனூர் அருகே ஓணாபுரம் பகுதியில் உள்ள நாகராஜன் என்பவரை தென்னந்தோப்பில் பழனிகுமார் என்பவர் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். இவர்(மார்ச்.2) அன்று வழக்கம்போல் மின் மோட்டாரை இயக்க சென்ற பொழுது மோட்டார் உடன் இணைக்கப்பட்டிருந்த 80 மீட்டர் காப்பர் வயர் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இந்த திருட்டு குறித்து சின்னமனூர் போலீசார் நேற்று(மார்.4) வழங்கு பதிவு செய்தனர்.