மரத்தில் இரு சக்கர வாகன மோதி ஒருவர் உயிரிழப்பு

விசாரணை;

Update: 2025-03-05 10:54 GMT
கடமலைக்குண்டு அருகே தர்மராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் முத்து(52). இவர் நேற்று (மார்ச்.4) தேவதானப்பட்டியில் உள்ள தனது சகோதரரை பார்த்து விட்டு பைக்கில் மீண்டும் வீடு திரும்பியுள்ளார். பைக் கோட்டைமடை ஓடை என்ற இடத்தில் வந்த போது நிலை தடுமாறி அருகில் இருந்த தென்னை மரத்தில் மோதியது. இந்த விபத்தில் முத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து கடமலைக்குண்டு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Similar News