பெரியகுளம் அருகே சருத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் குமரேசன்(42) இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சின்னசாமி என்பவருக்கு விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சம்பவ நாளன்று வீட்டின் அருகே நின்றிருந்த குமரேசனை, சின்னசாமி மற்றும் அவரது மனைவி வைத்தீஸ்வரி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்த புகாரில் தம்பதியர் மீது தென்கரை போலீசார் நேற்று(மார்ச்.4) வழக்கு பதிவு செய்தனர்.