ஆனைமலையான்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வனராஜ்(60). இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி மனவிரக்தியில் இருந்து வந்துள்ளார். இதன் காரணமாக சம்பவ நாளன்று தோட்டத்தில் இருந்த வனராஜ் விஷம் அருந்தி உள்ளார். அவரை மீட்ட உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி வனராஜ் உயிரிழந்தார். இது குறித்து குமுளி போலீசார் நேற்று(மார்ச்.4) வழக்கு பதிவு செய்தனர்.