வெளிநாட்டு மக்காச்சோளத்துக்கு சந்தை அமைக்க முயலும் தமிழக அரசு. விவசாய சங்கம் குற்றச்சாட்டு
வெளிநாட்டு மக்காச்சோளத்துக்கு சந்தை அமைக்க முயலும் தமிழக அரசு.தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் குற்றச்சாட்டு;
உள்நாட்டு மக்காச்சோள உற்பத்தியை ஊக்கப்படுத்தாத தமிழக அரசு வெளிநாட்டு மக்காச்சோளத்துக்கு தமிழகத்தில் சந்தை அமைக்க முயற்சித்து வருகிறது என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் குற்றச்சாட்டி உள்ளது. இதுகுறித்து அதன் நிறுவனர் ஈசன் முருகசாமி கூறியதாவது:- தமிழக அரசு வேளாண் விற்பனை குழுக்கள் வாயிலாக 40க்கும் மேற்பட்ட விவசாய உற்பத்தி பொருட்களுக்கு 1 சதவீதம் செஸ் விதித்து வருகிறது. இதில் மக்காச்சோளமும் அடங்கும். கோவை, திருப்பூர், ஈரோடு, நாகை மாவட்டங்களில் 1 சதவீதம் செஸ் வசூலிப்பது ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. தற்போது கூடுதலாக 15 மாவட்டங்களில் உற்பத்தியாகி விற்கப்படும் மக்காச்சோளத்துக்கு 1 சதவீதத்தை அமுல்படுத்தப்பட்டுள்ளது ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள கோவை திருப்பூர் ஈரோடு நாகை மாவட்ட விவசாயிகள் செக் நீக்கப்பட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர் விவசாயிகளிடமிருந்து நேரடியாக மக்காச்சோளம் கொள்முதல் செய்யும் வியாபாரிகள் உட்பட வண்டி வாடகை ஆகியவற்றை விவசாயிகளிடம் கழித்து பணத்தை கொடுப்பதால் விவசாயிகளின் வருமானம் கடுமையாக பாதிக்கப்படுகிறது விளைநிலங்களில் இருந்து விவசாயிகள் நேரடியாக விற்பனை செய்யும் மக்காச்சோளத்துக்கு செஸ் பிரிப்பதுடன் வரி செலுத்தாமல் செல்லும் வாகனங்களை பறக்கும் படை அமைத்து பல மடங்கு அபராத விதிப்பது உள்ளிட்ட செயல்களால் இந்த மாவட்டங்களுக்கு வியாபாரிகள் வர மறுக்கின்றனர் இதனால் மக்காச்சோளம் தேக்கமடைந்து விவசாயிகள் மேலும் பாதிக்கப்படும் சூழல் உள்ளது உள்நாட்டு மக்காச்சோளத்துக்கு ஒரு சதவீத செஸ் விதித்த தமிழக அரசு இதன் வாயிலாக உள்நாட்டு மக்காச்சோளத்தை விற்க முடியாத அளவுக்கு விலையை உயர்த்தி விட்டு வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மரபணு மாற்றப்பட்ட மக்காச்சோளத்துக்கு சந்தையை உருவாக்கும் முயற்சியை மேற்கொண்டு வருவதாக சந்தேகம் இருக்கிறது விவசாயிகளுக்கு ஏற்பட்டு வரும் இந்த பாதிப்புக்கு தமிழக அரசை முழு பொறுப்பிற்கு வேண்டும் மக்காச்சோளத்துக்கு விநியோகிக்கப்பட்டுள்ள ஒரு சதவீத செஸ் விதிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டு வரும் விவசாயிகளின் நலனை கருதி இதை வேளாண் விற்பனை குழு வளாகங்களில் மட்டுமே வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் வேளாண் விற்பனை வணிகத்த துறையினரால் பட்டியலிடப்பட்டுள்ள 40 பொருட்களுக்கும் விவசாயிகள் வியாபாரிகள் இடையே நேரடியாக நடக்கும் விற்பனைக்கு முழுமையாக விளக்க அளிக்க வேண்டும் முதல்வர் விஷயத்தில் உடனடியாக தலையிட்டு செஸ் வீதியில் திருத்தம் செய்ய உத்தரவிட வேண்டும் என தெரிவித்தார்