காஞ்சிபுரத்தில் ஊராட்சி தலைவியின் கணவர், கவுன்சிலர் கைது

Update: 2025-03-08 09:04 GMT
காஞ்சிபுரம் மாவட்டம் மேட்டுப்பாளையம் ஊராட்சி தலைவியாக இருப்பவர் தேவி; சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். தி.மு.க., பிரமுகரான இவரது கணவர் வேலுவும், சுயேச்சை கவுன்சிலரான ராகுல் காந்தியும், ஒரகடம் அருகே மேட்டுப்பாளையம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும், 'அசன்டாஸ் பஸ்ட் ஸ்பேஸ்' என்ற தனியார் தொழிற்சாலை நிர்வாகத்தினரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, தொழிற்சாலை சட்ட ஆலோசகர் அருண், ஒரகடம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்ததில், புகாரில் முகாந்திரம் இருந்ததை அடுத்து, ஊராட்சி தலைவியின் கணவர் வேலு, 54, கவுன்சிலர் ராகுல்காந்தி, 31, ஆகிய இருவரையும் நேற்று கைது செய்து, ஸ்ரீபெரும்புதுார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, வேலுார் மத்திய சிறையில் அடைத்தனர்.

Similar News