வெள்ளகோவிலில் வீட்டில் இறந்து கிடந்த கட்டிட ஒப்பந்ததாரர்
வெள்ளகோவிலில் வீட்டில் இறந்து கிடந்த கட்டிட ஒப்பந்ததாரர் போலீசார் விசாரணை;
சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்தவர் உமா சங்கர் (வயது 55). இவர் வெள்ளகோவில் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி கட்டிட ஒப்பந்ததாரராக வேலை செய்து வந்தார். இவருக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பாதிப்பு மற்றும் நெஞ்சு வலி இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி உமாசங்கர் தங்கி இருந்த வீட்டுக்கு அவருடைய நண்பரான ஈரோடு மாவட்டம் தாண்டாம்பாளையம் கே.பி.ஆர்.நகரை சேர்ந்த பாபு வந்தார். அப்போது சோபாவில் பேச்சு மூச்சு இன்றி உமாசங்கர் கிடந்துள்ளார். உடனே அவரை காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் உமாசங்கர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.அவருடைய செல்போனில் இருந்த எண்கள் மூலம் உறவினர்கள் யாரையும் கண்டுபிடிக்க முடியாத நிலையில் பாதுகாப்பு கருதி அவரது உடல் திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள் ளது.இது தொடர்பாக பாபு கொடுத்த புகாரின் பேரில் வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்