மலைகளில் மர்ம நபர்கள் தீ வைப்பு!
சத்துவாச்சாரி நடப்பாறை பகுதியில் உள்ள மலைகளில் மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர்;
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி நடப்பாறை பகுதியில் உள்ள மலைகளில் மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். இதனால் மலையில் உள்ள செடி, கொடிகள் மற்றும் மரங்கள் கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் அதற்குள் மலை முழுவதும் தீ பரவியது.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.