வருஷநாடு பகுதியை சேர்ந்த சின்னமுனியாண்டி என்பவர் சில நாட்கள் முன்பு தற்கொலை செய்து கொண்டார். செல்வி என்பவர் பொய் பாலியல் புகார் அளித்ததால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாக அவரது உறவினர்கள் மார்.9 அன்று க. விலக்கு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து க.விலக்கு போலீசார் மாரியப்பன், வனராஜ், மணிகண்டன், ராஜேஷ் கண்ணன், குற்றாலன் உள்ளிட்ட 12 பேர் மீது நேற்று (மார்.10) வழக்கு பதிவு.