நல்லிரவில் பேருந்தை சிறை பிடித்து திமுக நிர்வாகிகள்

பல்லடத்தில் நள்ளிரவில் பேருந்து சிறைபிடித்த திமுக நிர்வாகிகள் பரபரப்பு;

Update: 2025-03-11 15:13 GMT
பல்லடம் தாராபுரம் சாலையில் மதுரையில் இருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து கள்ளிபாளையம் பகுதியில் நிறுத்தாமல் சென்றதால் திமுகவை சேர்ந்த இப் பகுதி கிளை நிர்வாகிகள் கோபு உள்ளிட்டோர் தலைமையில் சிறைபிடித்தனர்,கள்ளிப்பாளையம் பகுதியில் பேருந்து நிறுத்தம் மற்றும் போலீஸ் சோதனை சாவடி இருக்கும் இப்பகுதியில் சுமார் 5000க்கும் மேற்பட்டோர் வசிக்கும் முக்கிய பேருந்து நிறுத்தமாகும். அனைத்து பேருந்துகளும் நின்று செல்லும் என அரசு சார்பாக மற்றும் மாவட்ட ஆட்சியர் சார்பாகவும் போக்குவரத்து பணி மனைக்கு பலமுறை உத்தரவிட்டும் ஆனால் அதனை பேருந்துகள் ஓட்டுநர் நடத்துனர் பொருட்படுத்திக் கொள்வதில்லை என்று குற்றச்சாட்டு முன்வைத்தனர் மதுரையில் இருந்து கோவை நேற்று சுமார் 11 மணியளவில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து கள்ளிபாளையம் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் பயணிப்பதற்காக கைநீட்டி நிறுத்திய போதும் நிற்காமல் சென்றதாகவும் இதனால் இப்பகுதியை சேர்ந்தவர்கள் பேருந்தை மறித்து சிறை பிடித்தனர் அதனைத் தொடர்ந்து இது போன்று தவறுகள் நடக்காது என்று ஓட்டுநர் நடத்துனர் உறுதியளித்ததை தொடர்ந்து சுமார் 1 மணி நேரத்திற்கு பிறகு பொதுமக்களாக விடுவித்தனர், பேருந்துகள் நிற்கவில்லை என்றால் போராட்டத்தில் ஈடுபடுவதாக திமுக நிர்வாகிகளே தெரிவிக்கும் நிலை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Similar News