செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அதிமுக சாா்பில் குளிா்சாதனப் பெட்டி
அரசு மருத்துவமனைக்கு அதிமுக சாா்பில் குளிா்சாதனப் பெட்டி;
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் வைத்து தென்காசி வடக்கு மாவட்ட மருத்துவரணிச் செயலா் டாக்டா் திலீபன் ஜெய்சங்கா் ஏற்பாட்டில், மருந்துகள், அமிலங்களைப் பாதுகாக்கும் வகையில் குளிா்சாதனப் பெட்டி வழங்கப்பட்டது. அரசு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, வடக்கு மாவட்ட அதிமுக செயலா் செ. கிருஷ்ணமுரளி எம்எல்ஏ தலைமை வகித்து தலைமை மருத்துவா் ராஜேஷ்கண்ணனிடம் குளிா்சாதனப் பெட்டியை வழங்கினாா். அனைத்துலக எம்ஜிஆா் மன்ற இணைச் செயலா் டாக்டா் முத்தையா, மாவட்ட மருத்துவரணிப் பொருளாளரும் பணிநிறைவுபெற்ற சித்த மருத்துவருமான கலா ஆகியோா் முன்னிலை வகித்தனா். தொடா்ந்து, மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா் ராமசாமி ஏற்பாட்டில், உள்நோயாளிகளுக்கு பழங்கள் அடங்கிய தொகுப்புப் பைகள் வழங்கப்பட்டன. மருத்துவமனை ஆய்வக நுட்பநா் ஹரிஹரநாராயணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். மருந்தாளுநா் அப்பாஸ் மீரான் நன்றி கூறினாா்.