நரிக்குறவர் குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கிய கலெக்டர்
நரிக்குறவர் குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா;
நெல்லை மாநகர பேட்டை நரிக்குறவர் காலனி மக்கள் சரியான வீடுகள் இல்லாததால் மழைக்காலங்களில் அவதி அடைந்து வந்தனர்.இந்த நிலையில் இந்த நரிக்குறவர் காலனி மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் சுகுமார் தீவிர நடவடிக்கையால் இன்று (மார்ச் 12) 75 நரிக்குறவர் குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா நெல்லை தாலுகா அலுவலகத்தில் வழங்கப்பட்டது. பட்டா வழங்கிய ஆட்சியர் சுகுமாருக்கு நரிக்குறவர் மக்கள் நன்றி தெரிவித்தனர்.