உணவகத்தில் தகராறு கூலித் தொழிலாளியை அறிவாளால் வெட்டிய

முத்தூர் உணவகத்தில் தகராறு கூலி தொழிலாளியை அரிவாளால் வெட்டிய உணவாக பணியாளர் - 1 மணி நேரத்தில் கைது செய்த காவல்துறையினர் ;

Update: 2025-03-12 12:17 GMT
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே முத்தூர் கடைவீதி பகுதியில் தனியார் உணவகத்தில் உணவருந்தச் சென்ற முருகேசன் (வயது 43) மற்றும் உணவகத்தில் சப்ளையராக வேலை செய்யும் பூமிநாதன் என்பவருக்கு இடையே தகராறு. இதில் ஆத்திரம் அடைந்த பூமிநாதன் முருகேசனை கழுத்து தலை ஆகிய பகுதிகளில் அரிவாளால் வெட்டி படுகாயம். காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குபின் மேல்சிகிச்சைக்கு திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அனுப்பி வைத்துள்ளனர். வெள்ளகோவில் காவல்துறை விசாரணை. தப்பி ஓடிய பூமிநாதனை 1 மணி நேரத்தில் கைது செய்த காவல்துறையினர். காங்கேயம் அடுத்த முத்தூர் கடைவீதி பகுதியில் தனியாருக்கு சொந்தமான உணவகத்தில் நேற்று மாலை முருகேசன் (வயது 43) என்பவர் உணவருந்த சென்றுள்ளார். இவர் கூலி வேலை செய்து கொண்டு உள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை வயது முதிர்ந்த தாய் மட்டுமே உள்ளார். இந்த நிலையில் உணவகத்தில் பணியாற்றி வரும் பூமிநாதன் என்பவருக்கும் முருகேசன் என்பவருடன் உணவு பரிமாறுவதில் வாய்த் தகராறு  ஏற்பட்டுள்ளது. இதனிடையே உணவருந்தி விட்டு உணவகத்தின் வெளியே முருகேசன் வந்து கொண்டிருந்தபோது ஹோட்டலில் இருந்து அரிவாள் எடுத்து வந்து பூமிநாதன் முருகேசனை கழுத்து, தலை ஆகிய பகுதிகளில் பயங்கர ஆக்ரோஷத்துடன் வெட்டியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த முருகேசன் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் முருகேசனை காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின் மேல் சிகிச்சைக்காக முருகேசன் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்தனர்.  கூழித்தொழிலாளி முருகேசன் வெட்டிய உணவக பணியாளர் பூமிநாதன் தப்பி ஓடிவிட்டான்.  பின்னர் வெள்ளகோவில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி 1 மணி நேரத்தில் கைது செய்தனர்.  உணவகத்தில் சாப்பிட வந்தவரிடம் வாய் தகராறில் ஈடுபட்டதுடன் ஆத்திரமடைந்து அரிவாளால் வெட்டிய சம்பவம் முத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News