தமிழ் படைப்பாளர் சங்க இலக்கிய விழா

விழா;

Update: 2025-03-13 03:48 GMT
சங்கராபுரத்தில் தமிழ் படைப்பாளர் சங்க இலக்கிய விழா நடந்தது.சங்க தலைவர் நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். துணை செயலாளர் சக்திவேல் வரவேற்றார். செயலாளர் ஆண்டப்பன் துவக்க உரையாற்றினார். ஜெய்பிரதர்ஸ் நற்பணி மன்ற தலைவர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். இதில், 'எங்கும் தமிழ் எதிலும் தமிழ்' எனும் தலைப்பில் சாந்தகுமார்; மகளிர் தினம் பற்றி யாழினி; பாரம்பரிய உணவுகள் குறித்து, ரகுநந்தன் ஆகியோர் பேசினர். கார்குழலி அறக்கட்ளை தலைவர் தாமோதரன், ஆசிரியர் லட்சுமிபதி, தேவதிருவருள், சீனிவாசன், சுதாகரன், பாரதிகிருஷ்ணன், சவுந்தர்ராஜன், தெய்வநாயகம், ராமசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்ற மாணவ-மாணவியர் கவுரவிக்கப்பட்டனர். கமலநாதன் நன்றி கூறினார்.

Similar News