கம்பம் அருகே காமையகவுண்டன்பட்டி பகுதியை சேர்ந்தவர் நாகம்மாள் (65). இவருக்கு கடந்த சில வருடங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளது. அதனால் மனவேதனையில் இருந்த அவர் நேற்று முன் தினம் முல்லைப் பெரியாற்றில் குதித்துள்ளார். நேற்று (மார்.12) ஆற்றின் தடுப்பணையில் நாகம்மாள் உடலை மீட்ட வீரபாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்