கடமலைக்குண்டு பகுதியை சேர்ந்தவர் ஜான்அசோக். இவருக்கு கடந்த 20 வருடங்களுக்கு முன்பு இருதய அறுவை சிகிச்சை செய்த நிலையில் அதற்காக மருந்து மாத்திரை உட்கொண்டு வந்துள்ளார். அப்பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வேலை பார்த்து வரும் ஜான்அசோக் நேற்று (மார்.15) வேலை முடிந்து வீடு திரும்பிய பொழுது மயங்கி விழுந்துள்ளார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார். போலீசார் விசாரணை.