உத்தமபாளையம் மதுவிலக்கு போலீசார் நேற்று (மார்.16) ஆனமலையான்பட்டி பகுதியில் சட்டவிரோத மது விற்பனை சம்பந்தமாக ரோந்து பணி மேற்கொண்டனர். அப்பகுதியில் சாக்குப் பையுடன் சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த அருண்குமார் என்பவரை சோதனை செய்த பொழுது அவரது சாக்கு பையில் விற்பனை செய்வதற்காக 28 மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் அருண்குமாரை கைது செய்தனர்