போடி தாலுகா காவல் நிலைய போலீசார் நேற்று (மார்.16) ரோந்து பணி மேற்கொண்டனர். குப்பண்ணாசாரிப்பட்டி பகுதியில் உள்ள காளியம்மன் கோவில் அருகே முருகன், சக்தி குமார், ராதாகிருஷ்ணன், வாசகர், ராமகிருஷ்ணன் ஆகியோர் சட்டவிரோதமாக பணம் வைத்து சீட்டாடியது தெரியவத்தது. சீட்டுக்கட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் ஐந்து பேர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.