பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீசார் நேற்று (மார்.16) புகையிலை தடுப்பு சம்பந்தமாக மாரியம்மன் கோவில்பட்டி பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்பொழுது அப்பகுதியில் உள்ள பெட்டிக்கடை ஒன்றில் சோதனை செய்த போது கடையில் சட்ட விரோதமாக புகையிலை பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் அமராவதி, நாகராஜ் ஆகிய இருவர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்