மாணவி மரணத்துக்கு நீதி கேட்டு பார்வையற்றோர் போராட்டம்
திருச்சி விழி இழந்தோர் பள்ளியில் பார்வையற்ற பள்ளி மாணவி மர்ம மரணத்தில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டம்;

திருச்சி பார்வையற்றோர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார் பில் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று காலை ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது, பார்வையற்ற பள்ளி மாணவி மர்ம மரணத்தில் தொடர்பு உடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுகுறித்து குழு அமைத்து விசாரணை செய்து அதன் உண்மை தன்மையை வெளிக்கொண்டு வர வேண்டும். எதிர்கா லத்தில் பார்வைகுறைபாடுடைய மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிக ளின் பாதுகாப்பு மற்றும் கல்வி போன்றவற்றை மேம்படுத்த தேவை யான தகுதி உடைய ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட் டன. இதில் திரளான பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.