கலவை அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி ஒருவர் பலி!
கலவை அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி ஒருவர் பலி!;

கலவையை அடுத்த ஆரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் புருஷோத் தமன் (வயது 25), டிரைவராக வேலை செய்து வந்துள்ளார். நேற்று மாலை தனது வீட்டிற்கு மோட்டார்சைக்கிளில் சென்றுள்ளார். ஆற்காடு அடுத்த பாப்பேரி தனியார்கம் பெனி அருகே சென்றபோது எதிரே வந்த கார் புருஷோத்தமன் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த ஆற்காடு தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.