தேவதானப்பட்டி அருகே இருசக்கர வாகன விபத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு
வழக்குப்பதிவு;
தேவதானப்பட்டியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (27) மற்றும் இவரது 25 வயது காதலி, இருவரும் நேற்று முன் தினம் டூவீலரில் தேவதானப்பட்டி பைபாஸ் சாலையில் சென்றுள்ளனர். டூவீலரை ஜெயக்குமார் அதிவேகமாகவும், அஜாக்கிரதையாக ஓட்டியதால் காதலி டூவீலரில் இருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து தேவதானப்பட்டி போலீசார் ஜெயகுமார் மீது நேற்று (மார்.17) வழக்கு பதிவு செய்தனர்.