போலி ஆவணங்கள் ஆள்மாறாட்டம் செய்தவர்கள் குற்றப்பிரிவு போலீசாரால் கைது
கைது;
பெரியகுளம் பகுதியை சேர்ந்தவர் பாலவிஜய். இவர் தான் மற்றும் தனது உறவினரின் 33 சென்ட் நிலத்தை போலி ஆவணங்கள் மற்றும் ஆள்மாறாட்டம் செய்து கட்டத்தேவன் உள்ளிட்ட சிலர் மோசடி செய்ததாக குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். இது குறித்து கட்டத்தேவன், ரவிசங்கர், மீனா, சிவக்குமார் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் வழக்கில் தொடர்புடைய ஈஸ்வரன், குருசாமி ஆகியோரை நேற்று (மார்.17) கைது செய்தனர்.