கழிப்பறையை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
கோரிக்கை;
கடமலைக்குண்டு - மயிலாடும்பாறை ஒன்றியத்திற்கு உட்பட்ட துரைச்சாமிபுரம் பகுதியில் சுமார் 2000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பே இப்பகுதியில் கட்டப்பட்ட பொதுக்கழிப்பறை பயன்பாட்டில்லாமல் காணப்படுகின்றது. இதனால் பொதுமக்கள் பலரும் திறந்தவெளியில் கழிப்பிடத்தை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. கழிப்பறையை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை.