தேவதானப்பட்டி அருகே செங்குளத்துப்பட்டியை சேர்ந்தவர் சின்னக்கருப்பன் (75). இவர் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் உள்ள சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்பொழுது அவ்வழியாக சுந்தர் என்பவர் ஓட்டி வந்த பைக் சின்னக்கருப்பன் மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து தேவதானப்பட்டி போலீசார் நேற்று (மார்.17) வழக்கு பதிவ செய்தனர்.