வாலாஜாபேட்டை அருகே தந்தை, மகன் கைது!
வாலாஜாபேட்டை அருகே தந்தை, மகன் கைது!;

வாலாஜாபேட்டை அடுத்த திருமலைச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சண்முகம். இவரது மனைவி செல்வராணி (வயது 63). இவர் பெயரில் 3 ஏக்கர் நிலம் உள்ளது. இவர்களது மகள் புஷ்பலதா, கணவர் வேலு என்பவருடன் அதே ஊரில் வசித்து வருகிறார். இவர்கள் செல்வராணியிடம் சொத்துக்காக அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளனர். இந்தநிலையில் வேலு (40), அவரது மகன் இளங்கோவன் (25) ஆகிய இருவரும் செல்வராணியிடம் சொத்து கேட்டு பிரச்சினை செய்ததில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வேலு. அவரது மகன் இளங்கோவன் இருவரும் கட்டையால் செல்வராணியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வாலாஜாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து வேலு, இளங்கோவன் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.