காவேரிப்பாக்கம்: அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி பலி

வாகனம் மோதி தொழிலாளி பலி;

Update: 2025-03-20 04:44 GMT
காவேரிப்பாக்கம் அடுத்த களத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மேகநாதன் (வயது 50), கூலி தொழிலாளி. இவருக்கு சாந்தி (40) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். மேகநாதன் வேலைக்கு சென்று விட்டு மீண்டும் இரவு வீடு திரும்பினார். சித்தஞ்சி பஸ் நிறுத்தம் அருகே தேசிய நெடுஞ்சாலையை கடந்தபோது, வேலூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதி தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அங்கிருந்தவர்கள் அவளூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், மேகநாதன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுதொடர்பாக மேகநாதன் மகன் அறிவழகன் அவளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News