சேலம் மாநகரில் ஊர்வலம், பொதுக்கூட்டம் நடத்த கட்டுப்பாடு
போலீஸ் கமிஷனர் தகவல்;
சேலம் மாநகரில் அரசியல் கட்சிகள் மற்றும் சங்கங்கள் சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டம், ஊர்வலம், உண்ணாவிரதம், பொதுக்கூட்டம் போன்றவற்றை நடத்துவதற்கு மாநகர போலீஸ் கமிஷனரின் அனுமதி பெற்ற பின்னரே நடத்த வேண்டும். இத்தகைய நிகழ்ச்சிகளுக்கு குறைந்தபட்சம் 5 நாட்களுக்கு முன்பு விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட கால அளவுக்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட மாட்டாது என்று போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபிநபு தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், விளையாட்டு, திருமணம், இறுதி ஊர்வலம் மற்றும் மத நிகழ்ச்சிகள் போன்றவைக்கு இது பொருந்தாது. நேற்று நள்ளிரவு முதல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 2-ந் தேதி நள்ளிரவு வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.